Sunday 15 April 2012

தொடரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் - அதன் நியாயமும் தேவையும் - கோவையில் கருத்தரங்கம்


கூடங்குளம் அணு உலையை ஏன் மூடவேண்டும்?
தொடரும் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் நியாயம் என்ன?

ஆகிய கேள்விகளை முன் நிறுத்தி நடத்தப்படும்
கருத்தரங்கிற்கு
தங்களை அன்போடு அழைக்கிறோம்.

இடம்: அண்ணாமலை ஓட்டல் அரங்கம், ரயில்வே சாலை, கோவை.
நாள்: 22.04.2012 (ஞாயிறு), காலை சரியாக 9.30 மணிக்கு.

தலைமை: திரு. கு. இராமகிருட்டிணன்
பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்.
ஒருங்கிணைப்பாளர், (கோவை மாவட்டம்)
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம், தமிழ் நாடு.

சிறப்புரை: திரு. நீரஜ் ஜெய்ன் (NEERAJ JAIN).
புகழ் பெற்ற அணு உலை ஆய்வாளர்,
மகாராட்டிரத்தில் இயங்கிவரும் ‘லோகாயத்என்னும் இயக்கத்தின் தலைவர்.

கருத்துரை: டாக்டர். ஆர். ரமேஷ்
மருத்துவர் மற்றும் நிலவியல் ஆய்வாளர்.

வரவேற்புரை: திரு. பொன். சந்திரன்
மக்கள் சிவில் உரிமைக் கழகம், கோவை.

·         கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதா?
·         தேசத் துரோகக் குற்றமா? அல்லது
·         தென் தமிழ் நாட்டையும் மானுடத்தையும் காப்பதற்கான மனித உரிமைச் செயல்பாடா?
·         கூடங்குளம் அணு உலை கூடாது என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் என்ன?

போன்ற அடிப்படை கேள்விகளை விவாதிப்பதற்கான கருத்தரங்கில்
பங்கு பெறுவோம்! விழிப்பு கொள்வோம்!!
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
தொடர்புக்கு: 9443822256; 9443039630; Email: antinuke.kovai@gmail.com; Blog: antinukekovai.blogspot.in
குறிப்பு: திரு. நீரஜ் ஜெய்ன் அவர்கள் நிகழ்ச்சியன்று மதியம் 12.30மணிக்கு மும்பாய் செல்ல இருப்பதால் கருத்தரங்கம் குறித்த நேரத்தில் தொடங்கிவிடும்.

Friday 23 December 2011

Kudankulam Nuclear Power Plant: A Threat To South India


By V.T.PADMANABHAN
Cesium is a radioactive element created when a uranium atom is fissioned in the nuclear reactor. About 100 trillion trillion (10^26) atoms of cesium were released and was deposited in almost all places in the Northern hemisphere from Chernobyl in Ukraine when a reactor melt down and exploded in 1986. That would mean about one trillion atoms for every square meter of land and sea. From there, cesium gives off its gamma radiation, some 400 disintegration in every second from every square meter of land till 2016. After that, there will be 200 disintegrations per second till 2046. Each one of those disintegrations has the potential to damage your health or the health of your unborn child. Estimate of cesium and other radioactive particles being released from Fukushima will be available in about a month.
The element cesium has no role in the biosphere. However, since it mimics potassium, plants take it up and it is thus pushed up in the food chain. The other radionuclides that mimic bioactive active elements are strontium and plutonium, which are stored in the bone as they look like calcium. Nuclear fission generate some 600 isotopes, of which 14 carbon (an isotope of carbon with 8 neutrons), tritium (hydrogen isotope with two neutrons), five isotopes of iodine, cesium, strontium and plutonium are more important internal emitters.
150 million people live in Karnataka, Kerala and Tamil Nadu in the peninsular India , 25 million more than that in Japan . It is the spices capital of the world. People cultivate cardamom, pepper, tea, coffee, ginger, turmeric, coconut, cashew and many more edible crops. Besides, our fishermen harvest exotic fishes high in nutrition and low in carbon footprint from the seas and the backwaters. These reach the food baskets of more than half the population of this planet.
A large portion of the land in this Spice Capital of the world will be severely contaminated if a Fukushima type event occurs in one of the eight 1000 MW(e) reactors being built/ planned in Kudankulam near Kanyakumari in Tamil Nadu. Besides ruining the lives of our farmers and fishermen, this will deprive billions of people of their spices.
Map of Kudankulam target area and approximate population living there are given below.

C:\Documents and Settings\Administrator\Desktop\KUDAMKULAM\kknpp-Distance-Final.jpg
LAND AND PEOPLE IN KUDANKULAM TARGET AREA
Distance
Total
Total
Range
Area in
Population
from
Area
Population
km
Range
in the
Source
Sq Km
in Area

Sq km
range
407
500
392857
159892857
400-500
141429
57561429
400
251429
102331429
300-400
110000
44770000
300
141429
57561429
250-300
43214
17588214
250
98214
39973214
200-250
35357
14390357
200
62857
25582857
150-200
27500
11192500
150
35357
14390357
100-150
19643
7994643
100
15714
6395714
50-100
11786
4796786
50
3929
1598929
40-50
1414
575614
40
2514
1023314
30-40
1100
447700
30
1414
575614
20-30
786
319786
20
629
255829
10-20
471
191871
10
157
63957
5 -10
118
47968
5
39
15989
0 -5
39
15989
Note: Average population density in three states in 2001 was 407.
Since Kudankulam is a coastal site, the area is a semicircle.
Since this is on the southern tip, the area and population will
lesser than what is given above. This is only an approximation.
Courtesy: countercurrents.org

Sunday 11 December 2011

KOODANKULAM WOMEN ON ONE DAY FAST AT COIMBATORE


On 15.12.2011 (Thursday) from 9am to 5pm
At Coimbatore, near Tamil Nadu Hotel, Gandhipuram.

Sixty four People’s organizations, which includes Political Parties, Social Organisations, Organisations for Dalit Rights, Human Rights Organisations and Environmental Groups, have extended their solidarity and commitment to participate in the captioned One Day fast.  Over 500 women and children from Koodankulam and nearby villages are expected to participate in the Fast.  The Fast is primarily intended to pray and prevail upon the Industrial and Trade organization of Coimbatore to refrain from their agitation to urge the Government to Commission the KKNPP immediately.

The Fast will be inaugurated by Ko.NAMMAZHWAR, the renowned Nature Farming Scientist and  the Fast will be concluded with the address of THAVATHIRU MARUDHASALA ADIGALAR, the Pontiff of Perur Mutt and will be Presided over by PMANE Coordinator Dr.S.P. UDAYAKUMAR.

THA. VELLAYAN, the President of Federation of Traders Associations in Tamil Nadu, GANESA  MURTHY, Member of Parliament of MDMK, KUMARA.RAVIKUMAR of Kongu Ilanjar Peravai, KOVAI SYED,   General Secretary of Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), ABU THAHIR, District President  of Socialist Democratic Party of India(SDPI) and Dr.RAMESH, a leading member of the Technical Committee of PMANE will be the key speakers..

There are other eminent personalities like Dr.Nanjil Nadan, Sahitya Academy Award Winner, Dr.N.Markandan, Former Vice Chancellor of Gandhi Gram University, S.N.Nagarajan, a Scientist and Marxist Scholar, Gnani, a renowned writer Dr.Jeevanandam from Green Peace Movement who will address the Meet. Members representing various Social Organisations, Environmental Groups and Human Rights Organisation will also greet the Meet and speak on the occasion.

Besides the above the highlight of the Fast will be the heart rendering presentations by  various struggling women and children from Koodankulam explaining their plight through speeches, slogans and songs.

We solicit the participation of all concerned in the Fast.

அணு உலையை மூடக்கோரி கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்



நாள்: 15.12.2011 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: ஓட்டல் தமிழ் நாடு அருகில், காந்திபுரம், கோவை.

மேற்படி நடக்கவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கோவையைச் சேர்ந்த 64 மக்கள் நல அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உண்ணா விரதப் போராட்டத்தில் பங்குபெற இசைவு தெரிவித்துள்ளன.

உண்ணாவிரதப் போராட்ட்த்திற்கு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்கள் தலைமை தாங்குவார்.

உண்ணாவிரத்த்தை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றுவார்.  பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் உண்ணா நிலைப் போராட்ட்த்தை முடித்து வைத்து நிறைவுறையாற்றுவார்.

வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், ம.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, கொங்கு இளைஞர் பேரவை குமார. இரவிக்குமார், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை சையத், , விவசாய சஙகத் தலைவர் நல்லுசாமி, ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட்த் தலைவர் அபுதாஹீர், போரட்டக்குழுவின் வல்லுனர்களில் முகாமையானவரான டாக்டர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இவர்களைத் தவிர பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், தொழில் முனைவோர், அறிஞர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு கருத்துரை மற்றும் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

கூடங்குளத்திலிருந்து வருகைத் தரும் போராடும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்போராட்ட்த்தின் தேவைப் பற்றியும், கூடங்குளம் அணு உலை எப்படி தமிழகத்தின் மின் பற்றாகுறைக்கு தீர்வாகாது என்றும் போராட்ட்த்திலிருந்து தாம் பெற்ற அனுபவங்களைப் பற்றியும் உரையாகவும், முழக்கங்களாகவும், பாடல்களாகவும் வழங்கவுள்ளனர்.

வாய்ப்பு உள்ளவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Thursday 8 December 2011

STRUGGLING KOODANKULAM WOMEN TO HOLD ONE DAY FAST AT COIMBATORE ON 15.12.2011




OVER  500 WOMEN FROM KOODANKULAM WILL HOLD A DAY’S FAST
TO PRAY & PREVAIL UPON THE INDUSTRIAL & COMMERCIAL INSTITUTIONS OF COIMBATORE TO REFRAIN FROM THEIR AGITATION TO URGE THE GOVERNMENT TO COMMISSION THE KKNPP IMMEDIATELY.
Venue: Near Hotel Tamil Nadu, Gandhipuram from 9am to 5pm.

The Anti Nuke Collective, Kovai ,representing several Politcal Parties, Tamil Nationalist Movements, Organisations for Protection of Dalit Rights, Environmental Activists and Human Rights Organisations  have returned from a Motor Bike Rally to Koodankulam to express our solidarity and as a part of our campaign against Nuclear Plants.

While the Anti Nuke Collective was at Koodankulam, the news about the agitation launched by the Industrial and Commercial Institutions urging the Government to commission the KKNPP immediately came as a surprise and rude shock to the struggling masses of Koodankulam. They indeed expressed their agony and apathy in this regard.

There are no two opinions about the need for Electrical energy.  However the Industrial/Commercial bodies ought to evaluate how safe would be the Nuclear Plant, if it violates and ignores the laid down norms for safety by National and International monitoring Agencies for Atomic Energy.  Post Fukushima, it may be noted that, Japanese Government had to spend, in a week,  a sum equivalent to Tamil Nadu’s  current five year plan,  to salvage the post Fukushima disaster.  It is needless to emphasise that in the event of such disaster, the onus of the relative financial burden will be levied on the Industries.  This has been the case in all Nuclear accidents, the world over. Hence the need of the hour is a detailed geological and oceanic scientific analysis with regard to the suitability of the location.. Failing which, it will put our future in jeopardy.

The facts also reveal that the existing installed power generating capacity is adequate to meet the needs of the requirements of Basic Industries and Agriculture in Tamil Nadu. There is also need to explore the possibilities of Energy Management Resources and Alternative Sources of Energy, pursuing people-centric and sustainable developmental models.  It is in this context, more than 500 women from the vicinity of Koodankulam have resolved to visit Kovai and hold a day’s fast to prevail upon the Industrial and Commercial Institutions to refrain from their agitation to urge the Government for commissioning of the KKNPP, which will endanger the lives and livelihood of lakhs of people in Southern Tamil Nadu for ages together, precisely because of its very location.

The One Day fast which will be held on 15th of this month will be presided over by Dr.S.Udayakumar, the Coordinator who is spearheading the Peoples’ Movement Against Nuclear Energy at Koodankulam.  Several leaders from various Political  parties, social organizations representing all walks of life and environmentalists will participate in the Fast in support of the struggle. It will be interesting to listen to the agitating women and children from Koodankulam on how they perceive the dangers of the Nuclear Plants. During their visit a group of women from Koodankulam will also endeavour to meet the leaders of the industry to explain their plight in person.

We also call upon the general public to participate in the Fast and extend their solidarity with the struggling people of Koodankulam.
ANTI NUKE COLLECTIVE, KOVAI
15, Saraswathi Apartments, Ganapathi Pudhur 3rd Street, Coimbatore: 641006.
Coordinators: Ku. RAMAKRISHANAN (9443822256); PON.CHANDRAN (9443039630)

போராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்


தொழில் அமைப்புகள் கூடங்குளம் அணு உலையை
உடனடியாக திறக்க வேண்டும்
என அறிவித்துள்ளப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்து
அப்போராட்டம் கைவிடப்படவேண்டுமென மன்றாடி
கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணா நிலைப் போராட்டம்
நாள்: 15.12.2011. காலை 9மணி முதல் 5மணி வரை,
காந்திபுரம் தமிழ் நாடு ஹோட்டல் அருகில்

பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோவையிலிருந்து கூடங்குளம்வரை மோட்டார் வாகனப் பரப்புரை செய்து போராடும் மக்களுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பினர் கூடங்குளம் சென்றிருந்த நேரத்தில் கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் மின்பற்றாக்குறையைத் தீர்க்க கூடங்குளம் அணு உலையை உடனே திறக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி அறிவித்துள்ளப் போராட்டச் செய்தியைக் கேட்டு கூடங்குளம்  அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அணு உலைகளை நிறுவுவதற்காக கைகொள்ளப்படவேண்டிய தேச, சர்வதேச அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் சட்ட மரபுகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளால் எவ்வாறு பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதை கோவை தொழில் அமைப்புகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளார்கள். ஜப்பானின் புக்குஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு பிரச்சினையை சமாளிக்க முதல் வாரத்தில் செலவிடப்பட்ட தொகை தமிழ்நாட்டின் தற்போதைய ஐந்தாண்டுகளுக்கான பட்ஜெட் தொகை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படப்போகும் தொழில் துறை பின்னடைவுகளில் தொழில்துறைகளுக்கான கூடுதல் வரி என்பது உலகளவில் நடந்துள்ள அனைத்து அணு உலை விபத்துகளும் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்மின்சாரம் வேண்டும் என்பதற்காக, அணு சக்தித் துறை அதிகாரிகளின் அசிரத்தை நடவடிக்கைகளால் தவறான இடத்தில் கட்டப்பட்டுவிட்ட இந்த அணு உலைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் சீரிய ஆய்வுகள் இன்று அவசியமாகிறது. அவ்வாய்வுகளின்றி அவற்றை உடனடியாகத் திறக்கச் சொல்வதென்பது எதிர்காலத்தில் நம்மால் அனைத்து விதங்களிலும் சமாளிக்க முடியாத பிரச்சினையாக அது மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கோவைத் தொழில்துறையினர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.   அதுமட்டுமின்றி மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாய் அழிக்கும் அணு உலையை, பிற மாநிலங்கள் வேண்டாம் என் புறக்கணித்த அணு உலையை அபாயகரமான பகுதியான கூடங்குளத்தில் தொடங்குவது தென் தமிழகத்திற்கே ஆபத்தானதாகும்.

 மின்பற்றாக்குறையைப் போக்க தமிழகத்தில் தற்போதுள்ள மின் உற்பத்தியே தமிழகத்தின் அடிப்படைத் தொழில்/விவசாயத் தேவைகளுக்கு போதுமானது. மேலும், அதிக மின்தேவைகளுக்கு பாதுகாப்பான மாற்று வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறிருக்க, குறிப்பாக கூடங்குளம் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாக அழிக்ககூடியது அங்கு நிறுவப்படவுள்ள அணு உலையும் அதன் அமைவிடமும் என்பதை விளக்குவதற்கும் இக் காரணத்தினால் கோவைத் தொழில் அமைப்பினர் தம் போராட்டத்தினை மறுபரிசீலனை செய்து அப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மன்றாடியும் அப்பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள கோவை வருகின்றனர்.

15.12.2011 அன்று நடக்கவிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமைத் தாங்கி நடத்திவைப்பார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரித்து திரளாகப் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கு பெறும் கூடங்குளம் பெண்களும் குழந்தைகளும் அணு உலை ஆபத்து பற்றிய விரிவான விளக்கங்களை தருவார்கள். இதில் பங்கு பெறும் பெண்களில் சிலர் தொழில் நிறுவனத் தலைவர்களைச் நேரடியாகச் சந்தித்து தம் துயரங்களைப் எடுத்துச் சொல்வார்கள்.

இப்போராட்டத்திற்கு பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு, 3வது தெரு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
மின்னஞ்சல்: antinuke.kovai@gmail.com; வலைத்தளம்: http://antinukekovai.blogspot.com
ஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன் (9443822256); பொன்.சந்திரன். (9443039630)

Monday 28 November 2011

கூடங்குளம் அணு உலை வேண்டுமா? வேண்டாமா?




கூடங்குளம் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று ஒரு புறமும்; அவசியம் வேண்டும் என்று மற்றொரு புறமும் குரல்கள் எழுப்பப்படுகின்றன. வேண்டும் வேண்டாம் என்ற விவாதத்தில் ஒவ்வொரு அணியும் பல கேள்விகளையும் விளக்கங்களையும் முன்வைக்கின்றன. பொது மக்களாகிய நாம் இவற்றின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்வது தேவை. இவ்விவாதத்தில் எழுப்பப்படும் சில முக்கியமான கேள்விகளை தொகுத்துக் கொள்வோம்.

எண்
ஏன் அணு உலை வேண்டும்?
ஏன் அணு உலை வேண்டாம்?
01
நமது மின் பற்றாகுறையைப் போக்க அணு சக்தி மூலம் பெறப்படும் மின்னாற்றல் மிக மிக அவசியம்.
மின் பற்றாகுறையைப் போக்க பாதுகாப்பான பிற மின் உற்பத்தி முறைகளை கையாளலாம். மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கலாம்.

02
இது மிகவும் சுத்தமானதும் சுகாதாரமானதுமாகும். அதன் பாதுகாப்பை அறிவியல் ரீதியாக உறுதி செய்து கொள்ளலாம்.
அணு உலைகள் பிறப்பிலேயே ஆபத்தானவை. அதில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு தலைமுறை தலைமுறையாய் பாதிக்கக்கூடியவை; அழிக்கக்கூடியவை; முடமாக்கக்கூடியவை. இதற்கு தீர்வே இல்லை.

03
அணுமின் உற்பத்திச் செலவு பிற மின் உற்பத்தி முறைகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
அணுமின் உற்பத்திச் செலவை, உற்பத்திக்கான காலம், உலை பராமரிப்பு, உற்பத்திக்காலத்திற்குப் பிறகு உள்ள பாதுகாப்பு பராமரிப்பு, அணுக்கழிவுகளை பாதுகாத்தல் ஆகியவைகளுக்கான செலவினங்களையும் கணக்கிட்டால் மிக மிக அதிகம்.

04
விபத்து என்பது எல்லா சூழ்நிலைகளிலும் நிகழக்கூடியது. விபத்து நடக்கிறது என்பதற்காக ரயில் பயணத்தை நாம் தவிர்ப்பதில்லை.
பாதுகாப்பான அணு உலை என்பதில்லை. அணு உலை விபத்தின் விளைவுகள் சாதாரண விபத்துகள் போல் சம்பவ இடத்திலேயே முடிவதல்ல. இதன் கடும் பாதிப்பு தலைமுறை தலைமுறையாய் சந்திக்கவேண்டும்.  

05
கூடங்குளம் அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ள இடத்தைப் பற்றிய சர்ச்சை தேவையற்றது.
கூடங்குளம் நிறுவப்பட்டுள்ள இடம் நில அதிர்வுக்கும் சுனாமிக்கும் இலக்காக கூடிய இடமாகும். இது சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவை ஏற்படுத்தும் வண்டல் குவியல் மற்றும் பிதுங்கு எரிமலைப்பாறைகள் உள்ளப் பகுதியாகும். இத்தகையப் பகுதியில் இயற்கைச் சீற்றத்திலிருந்து அணு உலையை பாதுகாப்பது இயலாது.

06
பாதுகாப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்களிடம் உள்ள அச்சம் தேவையற்றது.

அணு உலைகளால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் பற்றிய ஆய்வு பற்றி மக்கள் கருத்துக் கேட்பு நடத்தப்படவில்லை.
07
பேரிடர் வந்தாலும் அதனை சமாளிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் தலைமையில் இயங்கும் பேரிடர் மேலாண்மை கண்காணிப்பகம் கூடங்குளத்தை பூகம்பமோ சுனாமியோ தாக்காது என்று உறுதி கூற இயலாது என்று கூறியிருக்கிறது.

08
பயம் நம்மை ஆட்கொண்டால் வளர்ச்சியைக் காண இயலாது.
பயப்பட வேண்டியமைக்கு பயப்படுவதும், அது தொடர்பான எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும்தான் அறிவுடைமை.

09
விஞ்ஞானியும் முன்னாள் அதிபருமான அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் பாதுகாப்பானது என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அணுசக்தி தேவை என்றும் கூறியிருக்கிறார்.
அணு சக்தி ஆய்வில முதல் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் எம்.பி. பரமேஸ்வரன் அணு சக்தி மின்னாற்றலுக்கான மாற்றை காண்பதுதான் புத்திசாலித் தனமானது என்கிறார். ஆனால், அப்துல் கலாம் வானவியல் வல்லுனரான அப்துல் கலாம் அணு குண்டை வெடித்து பரவசம் அடைந்தவர். அணுசக்தியை அவர் வரவேற்று பேசுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அண்மையில் அணுமின் அதிகாரிகளை பார்த்த அவர் போராடுகின்ற மக்களை சந்திக்காமல் கருத்து வெளியிட்டு அவர் யாருக்கு விசுவாசமாக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.

10
அணு ஆற்றல்தான் உலக முன்னேற்றத்தின், வளர்ச்சியின் எதிர்காலம். அறிவியல் அதில் உள்ள சிக்கல்களை காலப்போக்கில் தீர்த்துக் கொள்ளும்.

அணு ஆற்றலை அதிகமாக பயன்படுத்தி வந்த முன்னேறிய நாடுகளே அணு உலைகளை படிப்படியாக மூடுவதென முடிவெடுத்துள்ளன.
11
ஃபுகிஷீமா போன்ற ஆபத்து கூடங்குளத்தில் ஏற்பட வாய்ப்பேயில்லை
நில அதிர்வு வரவே வராது என்று கூறப்பட்ட பகுதிகளில் கூட அண்மைக்காலமாக நில அதிர்வுகள் வந்துள்ளன. (எ.க: தாராபுரம்).

12
கூடங்குளத்தில் உருவாகும் அணுக்கழிவுகள் பற்றி கவலையே வேண்டாம். கழிவுகள் அணு உலை வளாகத்திற்கு வெளியே போகாது. குறிப்பாக கடலில் கலக்க மாட்டாது. ஆகவே அணு உலையைச் சுற்றியிருக்கும் மக்கள் அணுக் கழிவு தொடர்பான பாதிப்புகள் பற்றி கவலைப்பட தேவையில்லை.
அணுக் கழிவுகள் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பதைப் பற்றி வெளிப்படையான தகவல்கள் இல்லை. அணுக்கழிவுகளை ருசியா தம் நாட்டுக்கு எடுத்து செல்லும் என்று முதலில் கூறப்பட்ட்து. அவற்றை தற்போது கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே புதைப்பதாக இருந்தாலும் சரி அல்லது கடலுக்கடியில் புதைப்பதானாலும் சரி அதைப் பற்றிய விவரமோ, சூழலியல் பாதிப்புப் பற்றிய தகவல்களோ இல்லை. நாட்டு ரகசியம் என்னும் பெயரில் இவை மறைக்கப்படுகின்றன.

13
அணுக் கழிவுகளை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகள் சிறப்பாக கையாண்டு வருகின்றன. அந்நாடுகளின் அனுபவங்கள் நமக்கு வழிக்காட்டும்.
உண்மைதான். அமெரிக்காவில் உற்பத்தியான அணு உலைக் கழிவுகளை யூக்கா மலைப்பள்ளத்தாக்கில் 2002 முதல் புதைத்து வந்தது. இப்பகுதியிலிருந்து வெளியேறும் கதிர் இயக்கம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அமெரிக்க அரசு அப்பகுதியில் 100 மைல் சுற்றளவில் 10 லட்சம் ஆண்டுகள் மனித நடமாற்றத்திற்கு தடைவிதித்தது. பின்னர் 2011 முதல் இதனை கைவிட்டது. பரவலாக கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளிலும் பூர்வீக மக்கள் வாழும் பகுதிகளிலும், அறிவிக்கப்படாத ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் அமெரிக்க அணுக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.

15
அணு உலை குளிர்விப்பதற்கான நீர் பேச்சிப்பாறை நீர் தேக்கத்திலிருந்து பயன்படுத்தப்பட மாட்டாது. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.
அணு உலையை குளிர்விப்பதற்கு ஒரு நாளுக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாம். இதற்கு கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இயற்கை சீற்றத்தாலோ தொழில் நுட்ப காரணங்களாலோ சுத்திகரிப்பு தடைப்பட்டால் சேமிக்கப்பட்ட தண்ணீர் ஒன்றரை நாட்களுக்குத்தான் தாங்கும். இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்களைக் கொண்டுதான் சீர்படுத்த வேண்டும். இது சாத்தியமா? அணு உலைகள் குளிர்விக்கப்படவில்லை என்றால் வெடிக்கும் வாய்ப்பு உண்டு. இதற்கு மாற்று ஏற்பாடு பற்றிய அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் இல்லை. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அணு உலைச் சுற்றியுள்ள பகுதிகள் உச்ச நிலைப் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுடைய மீன் பிடித் தொழில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

16
கூடங்குளம் பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்கள் கலாம் அவர்கள் முன்மொழிந்துள்ளார். இவை பகுதி மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை தீர்க்கும்.
கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் குதித்தப்பிறகு அதனை மழுங்கடிப்பதற்கு  லஞ்சமாகத்தான் இத்திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. இதில் ஒரு சதம்கூட கல்பாக்கத்தில் செயல்படுத்தப்படவில்லையே! ஏன்?

17
வளர்ச்சிக்காக சில இழப்புகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
தற்கால “வளர்ச்சிக்குஎதிர்கால சந்ததியினரையும் அவர்களுடைய வாழ்வாதாரங்களையும் அழிப்பது எந்த வகையில் நியாயம்?

18
இழப்பீடுகளுக்கு சட்ட வரையறை கொண்டு வரப்பட்டுள்ளது. 2500 கோடி ரூபாய் வரை இழப்பீடு தர வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
போபால் விஷக் கசிவினால் ஏற்பட்டுள்ள இழப்பிற்கான இழப்பீடு 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை. இழப்பீடு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள உச்சவரம்பு உலக அணு உலை வியாபாரிகளுக்கு சாதகமானது. பாதிக்கப்படும் மக்களுக்கு அல்ல.

19
அணு உலை எதிர்ப்பாளர்கள் நாட்டு முன்னேற்றத்தின் எதிரிகள்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் தேச பக்தர்கள். மக்கள் நலனே தேச நலன்.

20
கூடங்குளம் அணு உலை தமிழ் நாட்டின் மின் பற்றாகுறையை தீர்க்கும்.
தமிழ் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின் உற்பத்தி என்பது ஒரு சதத்திற்கும் குறைவானதே. அணு சக்தி மின்சாரம் அறவே நிறுத்தப்பட்டாலும் மின் இழப்பு பெரிதாக இல்லை.

21
தமிழ் நாட்டிற்கு கிடைத்த வளர்ச்சி வாய்ப்புதான் கூடங்குளம் அணு மின் நிலையம். இதை நாம் இழந்துவிடக்கூடாது.
கருநாடகத்திலும் கேரளாவிலும் மக்கள் வேண்டாம் என மறுத்து வெளியேற்றப்பட்ட அணு உலையை தமிழ் நாட்டு மக்கள் மீது திணிப்பது ஏன்? தென் தமிழ்நாட்டை இராணுவ மயமாக்கவும் கொலைக் களமாகவும் மாற்றும் திட்டத்திற்கு நாம் பலியாக வேண்டுமா?

22
பிரான்சு நாட்டில் 75% அணு மின் சக்தியை நம்பித்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் மின் உற்பத்தியில் 20% அணு மின் சக்தியிலிருந்துப் பெருகிறார்கள்.
1979இல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பிற்கு பிறகும், 1986இல் ருசியாவில் செர்னோபில் அணு உலை வெடிப்பிற்குப் பிறகும் புதிய அணு உலைகள் அந்நாடுகளில் நிறுவப்படவில்லையே? ஏன்? பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை ஜெர்மனி ஏற்க மறுத்துவிட்டதற்கான காரணம் என்ன?

23
1988இல் தொடங்கப்பட்ட கூடங்குளம் திட்டத்தை அப்பகுதியில் சிலர் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்ப்பதன் நோக்கம் என்ன?
1988 இலிருந்தே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்க அணுகுமுறையில் இருந்த மாற்றங்கள் காரணமாக கட்டமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டம் தற்போது ஃபுக்குஷீமாவிற்குப் பிறகு வீரியமடைந்திருக்கிறது.

24
அணு ஆயுதம் அபாயகரமானதாக இருந்தாலும் நமது தற்காப்பிற்கு அணு ஆயுதம் தேவை. அணு சக்தி தொழில் நுட்பமின்றி அணு ஆயுதம் சாத்தியமில்லை.
ஓவ்வொரு அணு உலையும் பொதிந்த அணுகுண்டுதான். அணு ஆயுதப் போர் மனித குலத்தையே அழிக்கும். அணு உலைகள் எதிரிகளின் கையில் அணுகுண்டுகளாக மாறும் அபாயம் உள்ளது
.
25
ஏறக்குறைய 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தொடங்கப்பட்டுள்ள இத்திட்ட்த்தை தற்போது நிறுத்துவதினால் ஏற்படவுள்ள இழப்பிற்கு யார் பொறுப்பு?
திட்டமிட்ட 7ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இல்லாவிட்டாலும் செலவு செய்யப்பட்டுள்ள வரையில் 2ஆயிரம் மெகாவாட் உற்பத்தியை மட்டுமாவது செய்வது நன்மை பயக்கும்
இத்திட்டத்தை அணு மின்னாற்றலாக அல்லாமல் வேறு வகையில் செயலாக்கத் தக்க மின் உற்பத்திக்கு அல்லது பிற பயன்பாட்டிற்கோ மாற்றமுடியுமா என்று சிந்திக்கவேண்டும். அணு உலையினால ஏற்படும் கேடுகளை கணக்கில் கொள்ளாமல், அப்பகுதி மக்களின் ஒப்புதலைப் பெறாமல் நிறுவப்பட்டுள்ள இத்திட்டத்தினை செயல்படுத்தியவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். நாம் ரூ 1.7 லட்சம் கோடி ஊழலில் இழந்த செல்வத்தைவிட இது பெரிய தொகையல்ல.

26
இது நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது. அணு உலை வேண்டாம் என்பவர்கள் தேச வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.
ஆம். எத்தகைய வளர்ச்சியை, வளர்ச்சிப் பாணியை காணவிழைகிறோம் என்பதே கேள்வி? உள்நாட்டுத் தேவைகளுக்கான உற்பத்தியா? ஏற்றுமதிக்கான உற்பத்தியா? நீடித்த வளர்ச்சியா அல்லது குறுகியகால வீக்கமா? 

27
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? வெளி நாட்டு பண உதவியுடன் கிருத்துவ அமைப்புகளும் தன்னார்வக் குழுக்களும் இப்போராட்டத்தை நடத்துகின்றன.
இது மக்களின் பிரச்சனை. இது விவசாயிகளின் பிரச்சனை. மீனவர்களின் பிரச்சனை. பெரும்பான்மையான மீனவர்கள் கிருத்து வழிப்பாட்டினர். அதன் காரணத்தினாலேயே கிருத்துவ அமைப்புகளும் போராடும் மக்களோடு நிற்கின்றனர். ஆனால் இது கிருத்துவர்கள் மட்டுமே நடத்தும் போராட்டம் அல்ல. அது சரி, போராடும் கிருத்தவர்கள் இந்திய குடிமக்கள் அல்லவா? அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?

28
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இந்திய-ருசிய நலனுக்கு எதிரானது. அமெரிக்கச் சதி இதன் பின்னணியில் உள்ளது.
தாராப்பூர் அணு உலை அமெரிக்க உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. ஜய்தாப்பூரில் நிறுவப்படவுள்ள பிரண்டாமான அணு உலை பிரான்ஸ் நாட்டு உதவியுடன் நிறுவப்படவுள்ளது. அணு உலை எதிர்ப்பாளர்கள் இவற்றையும் எதிர்க்கின்றனர். அணு உலை எதிர்ப்பு மக்கள் நலன் சார்ந்த்து.

29
இறுதியில் இதன் முடிவு அறிவியல் சம்மந்தப்பட்டது.  அறிவியல் அறிஞர்களின், நிபுணர்களின் முடிவே இறுதியானது.
மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அன்று. அறிவியல் அறிஞர்கள் அதிகாரத்தின் எடுபிடிகளாகவும், சுயநலமிகளாகவும் மாறிவிடும் சூழ்நிலையில் உண்மை செத்துவிடுகிறது.

30
மக்களுக்கும் நாட்டிற்கும் தேவையான இத்திட்டத்தை சில தேசத் துரோக சக்திகள்/விஷமிகள் திசைதிருப்ப்ப் பார்க்கிறார்கள்
இது இறுதியில் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது. குறிப்பாக வேர்மட்ட மக்களின் வாழ்வாதார உரிமைப் பற்றியது. தங்களுக்கு தேவையான வளர்ச்சிப் பாதையை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமைப் பற்றியது. உண்மையான மக்கள் அதிகாரம் பற்றியது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது என்ற நீதிபற்றியது.

31
மக்களிடையே உள்ள அறியாமையைப் போக்கி நாட்டின் முன்னேற்றத்திற்காக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆம், இத்திட்டத்தின் அறிவியல், அரசியல் மற்றும் அறவியல் (நீதி) சார்ந்த அடிப்படைகளை ஓரு திறந்த விவாதத்திற்கு உட்படுத்த அணு உலை எதிர்ப்பாளர்கள் தயார். அணு உலை ஆதரவாளர்கள் இதற்கு தயாரா?

அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு, 3வது தெரு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
மின்னஞ்சல்: antinuke.kovai@gmail.com; வலைத்தளம்: http://antinukekovai.blogspot.com
ஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன்(9443822256); பொன்.சந்திரன். (9443039630)